முதலில் உறவுகளை
தரம் பிரிப்போமானால்,
முதல் வட்டம் கூடபிறந்த
சகோதரர்கள், மற்றும்
சகோதரிகள், சித்தப்பா,
பெரியப்பா, மாமா அத்தை,
இரண்டாம் வட்டம்
இவர்களில் குழந்தை,
சின்னதாத்தாவின் வாரிசுகள்
மூண்றாவது. நமது உறவுகளை
தவிர தானே உறுவாகும்
உறவுகள்
அதாவது1, காய்கறி
விற்க்கும் பெண்மணி.
2,நமது வீட்டு முக்கியமான
வேலைகள் என்றால் (சமூவேலன்னே
இந்த வருசம் மழைவரதுக்குள்ள
கொஞ்சம் ஓட்டு வேலை
பார்த்துவிடனும்மே,
போன வருக்கு வடக்கோரம்
கொஞ்சம் ஒழுகுச்சு,
அதுனால் என்ன தம்பி
பன்னி கொடுத்து விடலாம்
கவலை படதே( டெய் அம்மாகிட்ட
சொல்லி சமுவேல் மாமாவிற்க்கு
டீ போடசொல்லு)
இது ஒருவகை
உறவுகள்.
இன்றைய காலகட்டத்தில்
இரண்டாம் வட்டம் போறாமை,
மற்றும் கழ்ப்புணர்ச்சி
போன்றவைகளால் பெருகிவிட்டதை
கண்கூடாக பார்க்கிறோம்.
முதல்
வட்டமும் இதில் கொஞ்சம்
கலந்து போவது உறவை
தேடும் கிளிகளுக்கு
ஒரு சோகமான செய்தி.
ஆனால் வேலைதேடி வயிற்றுபிழைப்பிற்க்காக
பரதேசம் செல்லும்
அன்பர்களுக்கு கடவுள்
கொடுத்த வரம் தான்
இந்த மூன்றாவது வட்டம்.
நமக்கு ஒன்று என்றால்
ஓடிவரும் இவர்கள்
நம்மிடம் என்ன எதிர்பார்ப்பார்கள்
என்றால் அதற்க்கு பதில்
ஒன்றுமில்லை என் திருமணத்திற்க்கு
வந்து மோய் எழுதும்
சொக்காரன் திருமனத்திற்க்கு
வரும் முன்பு வரி புக்கை
எடுத்து பார்ப்பான் அவிய
நம்ம பிள்ளைக்கு என்ன
செய்தாக என்று
ஆனால் மும்பை போன்ற
நகரங்களின் பையாஜி,
சேட்டன்,பாய்சான் , எனக்கு
நிச்சிய தார்த்தம்
வரனும் என்று சொன்னால்
அன்றைய காரியங்களை
கூட தள்ளி வைத்து விட்டு
வரும் அந்த வழியில்
வந்த உறவுகள்.
நம்ம பய கரக்டா
டயத்துக்கு வருவான்.
கடைய மூடிட்டு வர
கொஞ்சம் லேடாயிட்டு,
பிள்ளைகளை ஸ்கூலில்
இருந்து கூட்டிட்டு வர
நேரமாயிடுத்து, ஆபீஸ்ல
பர்மிசன் கொடுக்க
வில்லை இப்படி பல
சாக்குகள்.
எங்களது
பாட்டி மதுரையில் இறந்து
விட்டார்கள். தகவலறிந்து
எங்களது உறவினர்கள்
மறுநாள் மதியம் போலதான்
வந்தார்கள்.
பெரியம்மா சென்னையிலிருந்து
மறுநாள் தான் வந்தார்கள்.
ஆனால் முதல் காலையில்
இறந்த எங்களது பாட்டியின்
ஈமசடங்கிற்க்கு
எங்களது
உறவினர் வருகை தரும்
முன்பே அனைத்து காரியங்களையும்
செய்து பூபல்லாக்குகூட
தயார் செய்தது இந்த
மூண்றாம் உறவுகள்.
சொந்தங்கள் வந்தது
மூக்கைசீந்தி அழுதது.
பிறகு இரவு பஸ் பிடித்து
ஊருக்கு கிளம்பியது.
தற்ப்போதைய காலகட்டத்தில்
உறவுகளின் அவசியம்
மற்றும் உறவினர்களின்
அலட்சியம் எவ்வளவு
மாற்றத்தை தனிமனித
வாழ்வில் ஏற்படுத்தி
விடுகிறதென்பது சில
உதாரனங்கள்.
2000 ஆம் வருடம் நான் எம்
டீவியில் பணியாற்றிக்கொண்டிருந்த
காலம்
அப்பொழுது திரு
இளையராசா அவர்களின்
மூத்த புதல்வன் கார்த்திக்ராசாவிற்க்கு
திருமணம் திருப்பதியில்
எங்கள் உயரதிகாரிக்கும்
பத்திரிக்கை அனுப்பீருந்தார்.
அவரும் சரவணா வருகிறாயா
என சொல்ல ஓசியில் அழைக்கும்
போதுஏன் வேண்டாமென்பானேன்,
மூட்டை முடிச்சுடன்
மறுசொலின்றி புறப்பட்டேன்.
திருமணம் விமரிசையாக
நடந்தது. ராசையா அவர்கள்
மனைவியார், மற்றும்
பவணி என எல்லோரையும்
பார்த்தேன் அவர்களுடன்
படமெல்லாம் எடுத்து
கொண்டேன். கார்த்திக்கும்
இரண்டு குழந்தைகளுடன்
நலமாக இருகிறார்.
கடந்த வருடம் யுவனின்
திருமணம் அதுகாதல்
திருமணம் பெண் இலண்டனை
சேர்ந்த தமிழ்பெண்
அவர்க்ளுக்கு தமிழ்
கலாச்சாரத்தின் படி
வாழ்வது பிடிக்கும்.
யுவனும் வந்து தனது
தந்தையிடம் சொன்னார்.
என்ன ஆனதோ தெரியவில்லை
ஆனால் தாயாருக்கு இந்த
திருமணத்தில் சிறிதும்
விருப்பமில்லை .
இருப்பினும் திருமணம்
முடிந்தது ஆனால் அந்த
பெண்னிற்க்கு அவர்களின்
வீட்டில் உறவு சரியில்லாத
காரனத்தால் விரைவிலேயே
தனிக்குடித்தனம்
செல்ல வேண்டிய நிலை
. தனித்து சென்றபின்
நன்து யுவனாருக்கும்
பல அருமை நன்பர்கள்
சிம்பு போல , பாங்காகில்
படபிடிப்பிற்க்கு
சென்ற போது அங்கு வாழ்க்கைku
தெவையான பல நல்ல
பழக்க வழக்கங்கள்
தொற்றிக்கொள்ள
நமது கலாச்சாரத்தை
நேசித்து தமிழகம்
தெடிவந்த பெண்னிற்க்கு
ஏமாற்றம் தொற்றிக்கொள்ள
விளைவு விவாகரத்து.
பாவம்
அந்த பெண்ணிற்க்கு நஷ்டம்
யவனுக்கு தான்.
ஏன்
யாராக இருந்தாலும் என்ன
தனது உறவுக்கார பென்னான
மூத்த மறுமகளை அரவனைப்பது
போல் நம்மை தேடிவந்த
பெண்ணை புறக்கனித்த
காரனத்தால் இந்த விளைவு.
உறவு என்பது பொருமை,
கருனை மற்றும் அன்பினால்
செய்யப்படவேண்டிய
ஒரு பெண்விலங்கு ஆனால்
தற்க்காலத்தில் அதை
களிமன் கொண்டு செய்து
பட்டேன உடைத்து விடுகிறார்கள்.
எனனக்கு தெரிந்த ஒரு
நன்பன் திருமனம்
முடித்தான் , சொந்தத்தில்
தான் தனது சித்தியின்
ஊரானதால் சரி என்று
முடிக்க திருமணத்திற்க்கு
பிறகுதான் தெறிந்தது
அந்த பெண்ணீற்க்கு சில
உள் வியாதிகள் என என்ன
செய்ய வருடம் பல
கடந்தது. குழந்தை
பேறில்லை அந்த பெண்ணின்
குடும்பத்தாரோ நீ தான்
கவனிக்கனும் அவனவன்
குழந்தை வேண்டுமென்று
லட்சகணக்கில் செலவழிக்கிறான்.
என அறிஉரை வேறு தள்ளிவிட்டாகிவிட்டது
என்ற திருப்தியில் அவர்கள்
ஆனால் பாவம் நம்மை
நம்பி வந்து விட்டாலே
என்ற ஒரே காரணத்தால்
விழுங்கவும் முடியாமல்
தூப்பவும் முடியாமல்
தவிக்கிறான்.
ஏன் இந்த சிக்கல்கள்
உறவுகளில் முதலில்
சகிப்பு தன்மை இல்லாமல்
போவது , பிறகு அவனேன்ன
பெரிசு, பிறகு வந்து
பாருடா ,
நான் எனது திருமணங்களும்
வெறுமணங்களும்
செய்தியில் திரு குமார்
அவர்களை உதாரணம்
காட்டியிருந்தேன் . அது
தமிழக இளைஞன் மற்றும்
கோக்கனி இணத்தை சேர்ந்த
பெண்ணிற்க்கு நடந்த
திருமணம் இன்றும் அவர்கள்
சச்ரவின்றி வாழ்கிறார்கள்.
இவர்கள் வீட்டி ஒன்றேன்றால்
நந்திதாவிற்க்கு அவர்கள்
பெற்றோரறிஉறை சொல்ல
குமாருக்கு அவனின் பெற்றோர்
அறிஉரை சொல்ல என ஆனந்தமாய்
காலம் ஓடுகிறது.
ஆனால்
படித்த மற்றும் வசதியுள்ள
குடும்பத்திலோ நீயா
நானா, என்ற பேதம் பெரிதாகி
எக்கேடும் கெட்டுபோ எனும்
\நிலை வந்து கடைசியில்
இரண்டு குடும்பமும்
கவலையில் வீழும் சூழல்
மனிதர் வாழ்வென்பது
இறவன் தந்த வரன்
அதை உறவுகளுடன் , புதிய
உறவுகளுடனும் , பேதமின்றி
இனிமையுடன் வாழ்வோம்